பெரியாரின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி அதிமுக மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் ஆவின் தலைவருமான கார்த்திகேயன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டி.ரத்தினவேல், பகுதி செயலாளர் மோகன் மற்றும் நிர்வாகிகள் அம்மா பேரவை மாநில துணை செயலாளர்கள் அரவிந்தன், டி.ஆர். சுரேஷ்குமார், பகுதி செயலாளர்கள் டி.பி.எஸ். மகாதேவன், சுரேஷ் குப்தா, அகிலாண்டம், எம்.ஆர்.ஆர். முஸ்தபா, கமலஹாசன், டி.எஸ்.எம். செல்வமணி மற்றும் நிர்வாகிகள் முன்னாள் கோட்டத் தலைவர் ஞானசேகர்,
ஒத்தக்கடை மகேந்திரன், எஸ் எம் டி மணிகண்டன், டாஸ்மாக் பிளாட்டோ, டிபன் கடை கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

