திருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிகபட்டது
அம்மா மக்கள முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி.தினகரன் அவர்கள் ஆணைக்கிணங்க, பகுத்தறிவு பகலவன் பெரியார் அவர்களின் 148 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில், ஜங்ஷன் பகுதி கழகச் செயலாளர் ஜிம் செல்வம் அவர்கள் ஏற்பாட்டில், கழகத் தலைமை நிலைய செயலாளர் , மண்டல பொறுப்பாளர் தொட்டியம் ராஜசேகரன் தலைமையில், ஆட்சி மன்ற குழு உறுப்பினர், சிறுபான்மை பிரிவு செயலாளர் கமுருதீன்,அமைப்புச் செயலாளர் எம்.எஸ்.ராமலிங்கம்,திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் தனசிங்,
திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் சாகுல் அமீத், கழக பொறியாளர் அணி செயலாளர் என்.எஸ்.தருண் ஆகியோர் முன்னிலையில், 
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அருகில் அமைந்துள்ள பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் நெல்லை லட்சுமண ,ஆனந்தராஜ் , வண்ணை லதா ,கதிரவன், மகாலட்சுமி, கல்நாயக் சதீஷ்குமார், மலைக்கோட்டை சங்கர், நூறுமுகமது, அழகர்சாமி, முத்துக்குமார், முருகன், ஆறுமுகம்,
கமலா தங்கராஜ், லோக்நாத் லோகு, தங்கமணி, ராகவன், சந்திரசேகர், வெங்கடேஷ், மணிமாறன், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

