திருச்சி சோமரசம்பேட்டையில் புகையிலைப் பொருட்களை பதுக்கி விற்ற மளிகை கடைகாரர் கைது ..
திருச்சி சோமரசம்பேட்டை காவல் சராகத்திற்கு உட்பட்ட இனம்புலியூர் பகுதியில் புகையிலைப் பொருட்களை பதுக்கி விற்பனை செய்வதாக சோமரசம்பேட்டை காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் அந்த பகுதியில் உள்ள மளிகை கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் இனாம் புலியூர் கிரிக்கல்மேடு பகுதியை சேர்ந்த திவாகர் (வயது 30) புகையிலைப் பொருட்களை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது . மேலும் திவாகரை சோமரசம்பேட்டை காவல் நிலைய போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 33 ஹான்ஸ் பாக்கெட் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தி உள்ளனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

