திருச்சியில் மதுவுக்கு அடிமையான தொழிலாளி தற்கொலை.
திருச்சி குண்டூர் பர்மா காலனி மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 42).தொழிலாளி. மதுவுக்கு அடிமையான இவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இவரது குடிப்பழக்கம் தெரிந்து யாரும் பெண் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக பலமுறை தற்கொலை செய்து கொள்ள முயன்று பின்னர் காப்பாற்றப்படடு இருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது தாயார் வள்ளி வெளியே புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் சுபாஷ் சந்திர போஸ் யாரும் எதிர்பாராத வகையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .
இது குறித்து அவரது தாயார் வள்ளி அளித்த புகாரின் அடிப்படையில் நவல்பட்டு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

