Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி செந்தண்ணீப்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி தொடர்ந்து 12 வது வருடமாக 100% தேர்ச்சி.மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பாராட்டு

0

'- Advertisement -

திருச்சி செந்தண்ணீப்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி 2012ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளியிருந்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட கடந்த 14 வருடத்தில் 11 வருடங்களாக தொடர்ந்து 100% தேர்ச்சி பெற்ற பள்ளி இந்த வருடமும் வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.

Ad banner

இதனை முன்னிட்டு பள்ளி தலைமையாசிரியர் எழியரசியிற்கும், பள்ளியில் முதல் மதிப்பெண் முகமது இம்தியாஸ் என்ற மாணவருக்கும் மக்கள் சக்தி இயக்க சார்பில் மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம் பொன்னாடை போர்த்தி,வாழ்த்தி,பாராட்டுகள் தெரிவித்தார்கள்.

இந்த நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தார்கள். நிகழ்வில் மக்கள் சக்தி இயக்க பண்பாளர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டார்கள்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.