திருச்சி நீதிமன்ற குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்

பி. வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாண்புமிகு உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் அறிவுறுத்தலின்படி பெண்களுக்கு சங்க நிர்வாக பொறுப்பில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்ற சுற்றறிக்கையின் படி திருச்சி நீதிமன்ற குற்றவியல் வழக்கறிஞர் சங்க உறுப்பினர்
N. அனுசியா அவர்களை குற்றவியல் வழக்கறிஞர் சங்க நிர்வாகியாக மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி எம்.கிறிஸ்டோபர் அவர்கள் நியமனம் செய்து உள்ளார்.

நீதிபதி கிறிஸ்டோபர்

குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட்
குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயற்குழு உறுப்பினர்களாக 10 பெண் வழக்கறிஞர்கள் உள்ளதால் சங்க நிர்வாகிகள் பரிந்துரையின் பெயரில் மாண்புமிகு மாவட்ட நீதிபதி சங்க நிர்வாகியை நியமனம் செய்து உள்ளார் என திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்

