Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பிக்கிள்பால், ஸ்கை பால் விளையாட்டு மையம் திறப்பு.

0

'- Advertisement -

திருச்சியில்

Ad banner

பிக்கிள்பால், ஸ்கை பால் விளையாட்டு மையம் திறப்பு.

 

ரயில்வே கோட்ட மேலாளர்,கூடுதல் கோட்ட மேலாளர் திறந்து வைத்தனர்.

 

திருச்சி கோட்டை ரயில் நிலையம் பின்புற வழியில் சாஸ்திரி சாலை பகுதியில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் விளையாட்டு, பொழுதுபோக்குக்காக உள் விளையாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.

இம்மையத்தில், பிரசித்தி பெற்ற விளையாட்டுக்களான பிக்கிள்பால், ஸ்கை பால் விளையாட்டுகளுக்கான மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், திருச்சியில் முதன்முறையாக ஸ்கைபால் விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்மையத்தில் தேசிய அளவிலான போட்டிகளை நடத்தும் அளவுக்கு மின் விளக்கொளியுடன் கூடிய வசதிகள் உள்ளன.

இம்மையத்தின் திறப்பு விழாவில், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் பாலக் ராம் நேகி, கூடுதல் கோட்ட மேலாளர் கே.எம். சத்யா ரத்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு விளையாட்டு மையங்களை திறந்து வைத்தனர்.

இங்கு மாத கட்டணம், மணிக் கட்டண அடிப்படையில் விளையாடலாம். ரயில்வே பணியாளர்களுக்கு கட்டண சலுகை உண்டு.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.