திருச்சி:சேம்பர் வசதி கேட்டு தமிழக தலைமை நீதிபதியிடம் மனு.

தமிழ்நாட்டின் தலைமை நீதிபதி மாண்புமிகு
எஸ் ..ஏ. தர்மாதிகாரி அவர்களிடம் 136 வருடம் பழமை வாய்ந்த திருச்சிராப்பள்ளி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் வசதிக்காக சேம்பர் வசதி வேண்டுமென்று குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
பி.வி.. வெங்கட் இன்று தலைமை நீதிபதியிடம் கோரிக்கை மனு வழங்கினார்.
முன்னதாக தலைமை நீதிபதியை குற்றவியல் வழக்கறிஞர் சங்க தலைவர் முல்லை சுரேஷ், துணைத் தலைவர்கள் வரகனேரி சசிகுமார்,பிரபு செயலாளர் வெங்கட் ஆகியோர் வரவேற்றனர்.

