திருச்சி பொன்மலை ரயில்வே மைதானம் பகுதியில் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் ,தண்ணீர் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பொன்மலை ரயில்வே மைதானம் பகுதியில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் “பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், துணிப்பையை எடுப்போம்” விழிப்புணர்வு நிகழ்வு மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி.நீலமேகம் தலைமையில் உலக பூமி தினம் (நேற்று 22.6.26 புதன்கிழமை) மரம் நடுதல், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல், மறுசுழற்சி செய்தல், சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்துதல் மற்றும் ஆற்றலைச் சேமித்தல் போன்ற செயல்கள் மூலம் பூமியைப் பாதுகாக்கலாம் என்றும், பொன்மலை பகுதியில் மரக்கன்றுகளை நட்டு, அப்பகுதியிலுள்ள பிளாஸ்டிக் பாட்டிகளை அகற்றி, துணிப்பையை கொடுத்து விழிப்புணர்வு நடந்தது. . . உலக பூமி தினத்தின் கருப்பொருள்” நமது ஆற்றல், நமது கோளம்” என்பதாகும்.
இந்த நிகழ்வுவிற்கு மக்கள் சக்தி இயக்க நிர்வாகி வெ.இரா.சந்திரசேகர், தாமோதரன், தண்ணீர் அமைப்பு ராமசந்திரன், ஜீவானந்தம், குமரன், இளங்கோ மற்றும் பலர் கலந்துக் கொண்டார்கள்.

