திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கே.என் நேரு தீவிர வாக்கு சேகரிப்பு. பொன்னகர் பகுதி செயலாளர் மோகன்தாஸ் சிறப்பான ஏற்பாடு.
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில்அனைத்து வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கழக அமைப்புச் செயலாளரான அமைச்சர் கே என் நேரு மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்,ஒன்பது தொகுதிக்கும் சென்று பம்பரமாக சுழன்று பிரச்சாரம் மேற்கொண்டு வந்தாலும் ஓய்வின்றி தனக்கு மேற்கு தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று மாலை பொன்னகர் பகுதிக்கு உட்பட்ட பஞ்சப்பூர். ,கருமண்டபம்,,பொன்னகர், மிளகுபாறை பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அமைச்சருக்கு பொன்னாகப் பகுதி செயலாளர் மோகன்தாஸ் சிறப்பாக வரவேற்பு அளித்தார்.மேலும் பகுதி முழுவதும் கட்சி கொடிகள் மற்றும் தோரணங்கள் கட்டி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

விதி வீதியாக நடந்து சென்ற அமைச்சர் உடன் சென்று பகுதி செயலாளர் மோகன்தாசும் அமைச்சருக்காக வாக்குகள் சேகரித்தார்.இந்த நிகழ்வில் 55வது வார்டு கவுன்சிலர் புஷ்பராஜ் மற்றும் வட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் என ஏராளமானோர் அமைச்சருடன் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர்.

