தமிழக படைப்பாளர் மக்கள் கட்சியின் சார்பில் திருச்சி ரயில்வே நிலையம் அருகில் உள்ள அருண் தனியார் திருமண மண்டபத்தில் ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜர் பாகவதரின் ஜெயந்தி விழா மற்றும் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்டம் மாநில பொதுச் செயலாளர் காளிதாஸ் (நேற்று ஞாயிற்றுக்கிழமை) தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிர்வாகிகள் தக்கலை நடராஜன், பொதிகை பாலு, திருச்சி சுகுமார், திருவெறும்பூர் எழில், ஸ்ரீதரன், பெல் ராஜா உட்பட மாவட்ட, மாநில நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் 25 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில பொதுச் செயலாளர் காளிதாஸ் தெரிவிக்கையில்;
நாங்கள் ஏன் நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட போகிறோம் என்றால், தமிழகத்தில் படைப்பு தொழில் செய்கின்ற கம்மாளர்கள் சுமார் 52 லட்சம் வாக்காளர்கள் கொண்டு ஆறாவது இடத்தில் இருக்கிறோம். ஆனால் . மத்திய மாநில அரசுகள் எங்களுக்கு அரசியல் அங்கீகாரம் தரப்படவில்லை.
கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் அரசியலிலும் நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம். பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் நுழையாத சமுதாயமாக விஸ்வகர்மா சமுதாயமாக உள்ளது. இது தொடர்பாக முதல்வரிடம் கோரிக்கை வைத்தும் எந்தவித பயனும் இல்லை.
திருச்சியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் முதற்கட்டமாக 25 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் காளிதாஸ் அறிமுகப்படுத்தினார். கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் தங்கள் சமுதாயம் புறக்கணிக்கப்படுவதால், தனித்து போட்டியிட்டுத் தங்களின் வலிமையை நிரூபிக்கப் போவதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எனவே, தமிழக படைப்பாளர் மக்கள் கட்சி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்திருக்கிறது. நாங்கள் தனித்துப் போட்டியிட்டு எங்களது சமுதாயத்தின் வலிமையை காண்பிக்க உள்ளோம். முதல் கட்டமாக 25 வேட்பாளர்களை இன்று (நேற்று ஞாயிற்றுக்கிழமை)அறிவித்துள்ளோம். 
தனித் தொகுதியை தவிர்த்து அனைத்து சட்டமன்ற தொகுதிகளும் எங்களது வேட்பாளர்கள் களம் காணுவார்கள் என்று தெரிவித்தார்.

