சண்டையால் விபரீத முடிவு எடுத்து விடக் கூடாதே என்ற அச்சத்தில் மனைவி தூங்கிய அறையை நள்ளிரவில் திறந்தால் கள்ளக்காதலனுடன் உல்லாசம் .கணவன் அதிர்ச்சி.
குளச்சல் கடற்கரை கிராமத்தை சேர்ந்த மீனவர் ஒருவர், தனது மனைவி மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
கணவர் மீன் பிடிக்க சென்ற சமயத்தில் மனைவி, வேறொரு வாலிபருடன் தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல் கணவருக்கு தெரிய வந்ததும், கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவும் இந்த பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் 2 பேரும் தனித்தனி அறையில் தூங்க சென்றனர். மகள் மீனவர் அறையில் படுத்து தூங்கி உள்ளார்.
இந்நிலையில் நள்ளிரவில் திடீரென ஏதோ சத்தம் கேட்டு கணவர் கண் விழித்தார். மனைவி கோபத்துடன் சென்று தனி அறையில் தூங்கியதால், ஏதாவது விபரீத முடிவு எடுத்து விடக் கூடாதே என்ற அச்சத்தில் அவர் அந்த அறை கதவை திறந்து பார்த்தார். அங்கு அவர் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தான் வீட்டில் இருக்கும் போதே கள்ளக்காதலனை வரவழைத்து அவருடன் மனைவி உல்லாசமாக இருந்ததை பார்த்த மீனவர், ஆத்திரத்தில் 2 பேரையும் சரமாரியாக அடித்து உள்ளார். கள்ளக்காதலனுக்கும் அவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சத்தம் கேட்டு பொதுமக்களும் திரண்டனர். அப்போது திடீரென கள்ளக்காதலன் டேபிளில் இருந்த பிளேடை எடுத்து, தனக்கு தானே கழுத்தை அறுத்து கொண்டதாக கூறப்படுகிறது . இதையடுத்து கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடந்த நபரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக குளச்சல் காவல் நிலைய.போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் சம்பவ இடத்துக்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

