திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை.
திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் .
திமுக முதன்மைச் செயலாளர் – அமைச்சர் கே.என். நேரு பங்கேற்பு.
தெற்கு மாவட்ட செயலாளர் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை.

திருச்சி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் 22.05.2025 வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் சத்திரம் பேருந்து நிலையம் வி.என். நகர், திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில்” மாவட்ட அவைத்தலைவர் என்.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் கழக முதன்மைச் செயலாளர் – அமைச்சர், மண்டல பொறுப்பாளர் – கே.என்.நேரு அவர்கள் பங்கேற்று வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்குகிறார்.
இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர், தொகுதி பார்வையாளர்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட – மாநகர அணிகளின் அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல்
கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார் .