திருச்சி புத்தூர் பகுதியில்
அடையாளம் தெரியாத முதியவர் பிணம்
யார் அவர் ? அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் விசாரணை

திருச்சி புத்தூர்
ஈ.வி.ஆர் :ரோடு தனியார் மருத்துவமனை அருகில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார்.அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற முழு விவரம் தெரியவில்லை.
இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அதிகாரி வடிவேல் அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் பேரில் அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த முதியவர் யார் என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.