Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததானம் செய்து அன்னதானம் வழங்கினார் அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் கோப்பு நடராஜ் .

0

'- Advertisement -

அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் தமிழக முதலமைச்சரும் , எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

 

அதில் ஒரு பகுதியாக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அந்தநல்லூர் ஒன்றிய கழகச் செயலாளர் கோப்பு நடராஜ் அவர்கள் அதிமுக பொதுச் செயலாளர் பிறந்த பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததானம் செய்தார்.

 

இந்த நிகழ்ச்சியை வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார் . இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளர் வளர்மதி, முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

 

இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய பொழுது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .

 

இந்த நிகழ்ச்சிகளை அதிமுக அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் கோப்பு நடராஜ் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார் .

 

முன்னதாக அதிமுக வடக்கு மாவட்ட அந்தநல்லூர்  ஒன்றிய செயலாளர் கோப்பு நடராஜ்  அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை  நேரில் சந்தித்து பூங்கொத்து அளித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறினார் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.