திருச்சியில்
லாட்டரி விற்ற முதியவர் கைது

போலீசார் விசாரணை
திருச்சி கோட்டை பகுதி கள்ளர் தெரு சந்திப்பு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கோட்டை காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திவ்யப்பிரியா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது அங்கு வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்றதாக திருச்சி பெரிய கடை வீதியைச் சேர்ந்த குமாரசாமி என்கிற ராஜ் (வயது 62) என்பவரை கோட்டை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் விற்றதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர் .