2 ரேஷன் கடைகளுக்கு ஒரே பணியாளர் . இதுதான் திராவிட மாடல் ஆட்சியா ? பாஜக திருச்சி மாவட்ட தலைவர் (மு) ராஜசேகரன் கேள்வி .
இதுதான் திராவிட மாடலா ?
பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாவட்ட முன்னாள் தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
திராவிட மாடல் அரசின் அவலம்!!!பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் விதமாக
நியாய விலை கடைகளில்.
இரண்டு நியாய விலை கடைகளுக்கு ஒரு விற்பனையாளர் என்ற ரீதியில்
பணி நியமனம் செய்து உள்ளார்கள்.
வரகனேரி கடை எண் 1ல் உள்ள பணியாளர் தான் சிம்சன் கடை 3 எண்ணுக்கும் விற்பனையாளர்.
இரண்டுக்கும் ஒரு விற்பனையாளர் எப்படி இரண்டு கடைகளிலும் இருக்கிற

பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய முடியும், தோராயமாக ஒரு கடையில் ஆயிரம் கார்டுகள் உள்ளது.
2000 கார்டுகளுக்கு ஒரு விற்பனையாளர் எவ்வாறு பில் செய்வது.
திராவிட மாடல அரசின் கையாளாகதனத்தால்
பணியாளர்கள் மனவேதனையில் உள்ளார்கள்.
இதனை உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொண்டு சரி செய்வாரா ? திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர்.
அல்லது இதே அவல நிலை தான் தொடருமா?
என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .