திருச்சி விமான நிலையத்தில்
இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட
ரூ.10 கோடி மதிப்புள்ள
உயர் ரக கஞ்சா பறிமுதல்.
பயணியிடம் தீவிர விசாரணை
திருச்சி விமான நிலையத்தில்
இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட
10 கோடி ரூபாய் மதிப்புள்ள
உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக
கஞ்சாவை கடத்தி வந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
இலங்கையில் இருந்து திருச்சி வந்த
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை
திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஆண் பயணி ஒருவர் தனது உடைமையில் போதை பொருட்களை மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து அதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள்,
அதனை சோதனை செய்த போது அதில் ஹைட்ரோபோனிக்ஸ் எனப்படும் உயர்ரக கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
இதனை அடுத்து உயர்ரக கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடத்தி வரப்பட்ட கஞ்சாவின் மொத்த எடை 9.9 கிலோ ஆகும்.
சர்வதேச சந்தையில் அதன் மொத்த மதிப்பு ரூபாய் 10 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருச்சி விமான நிலையத்தில் ரூ 10 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.