குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு
திருச்சியில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை.
ஓசானா பாடல்கள் பாடி கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நிகழ்ச்சியை நினைவு கூறும். வகையில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் 40 நாள் தவக்காலம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றனர். தவக்காலத்தின் முடிவில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும்.தவக்காலத்தின் போது பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். அதன் ஒருபகுதியாக ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று குருத்தோலை ஞாயிறு சிறப்பு பவனி திருச்சி மெயின்
கார்டுகேட் புனித லூர்து அன்னை ஆலயம், எடத்தெரு பசிலிக்கா சகாய மாதா ஆலயம்,,பழைய ஆலயம்,
,மேலப்புதூர் தூய மரியன்னை ஆலயம்,புத்தூர் பாத்திமா ஆலயம் பொன்மலைப்பட்டி புனித சூசையப்பர் ஆலயம் உள்பட திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. கைகளில் குருத்தோலைகளைப் பிடித்தபடி ஓசானா பாடல்கள் பாடி கிறிஸ்தவர்கள் பேரணியாகச் சென்றனர்.
பிறகு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.
இந்த நிகழ்வுகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர் .