திருச்சி மாநகரப் பகுதிகளில் கஞ்சா விற்ற 4 பேர் கைது.

திருச்சி மாநகரத்துக்கு உட்பட்ட எடமலைப்பட்டிபுதூர், கோட்டை, காந்தி மார்க்கெட் , பாலக்கரை ஆகிய காவல் நிலைய சாரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதி போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
இந்நிலையில் கஞ்சா விற்றதாக ராம்ஜி நகர் மலைப்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 52), இபி ரோடு விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த ( வயது20) , வடக்கு தாரா நல்லூர் காமராஜர் பகுதியை சேர்ந்த தர்மதுரை (வயது 21),
பாலக்கரை முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்த சுனில் (வயது 21 ) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 240 கிராம் கஞ்சாவைவும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர் .