Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் முன்னிலையில் அண்ணாவின் திருவருவ சிலைக்கு அஞ்சலி. அனைவரும் திரளாக பங்கேற்க அமமுக மாவட்டம் சார்பில் அழைப்பு

0

'- Advertisement -

 

Ad banner

நாளை அண்ணாவின் நினைவு நாள்: திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க,

பேரறிஞர் அண்ணா அவர்களின் 56வது நினைவு நாளை முன்னிட்டு
நாளை (03-02-2025) காலை 10:00 மணிக்கு, மேல சிந்தாமணியில் உள்ள பேரறிஞர் அண்ணாவின்
திருஉருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில்,
திருச்சி தெற்கு மாவட்ட அவைத் தலைவர் ராமலிங்கம் அவர்கள் தலைமையில்,

தலைமைக் கழக நிலையைச் செயலாளர், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தொட்டியம் ராஜசேகரன் மற்றும்,
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான
ப. செந்தில்நாதன் அவர்கள் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில்
மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள் &நிர்வாகிகள்,
ஒன்றிய செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள்,
சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள்,
வட்ட செயலாளர்கள் நிர்வாகிகள்,
கிளை கழக,ஊராட்சி கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.