திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகத்துறை நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்றது .
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி – தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகத்துறை சார்பாக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுசாமி முன்னிலை வகித்தார், சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகபிரிவு மாநில இணை தலைவர் ஜான் அசோக் வரதராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முரளி , கோட்டத் தலைவர்கள் ஜெயம் கோபி ,வெங்கடேஷ் காந்தி, மணிவேல், தர்மேஷ், கிருஷ்ணா, ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் செந்தில், ஐடி பிரிவு லோகேஷ், விஜயகுமார், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி ஷீலா செலஸ், மாரீஸ்வரி, மாவட்ட துணை தலைவர் கோகிலா, மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் நரேன், கிளமெண்ட், கார்த்திகேயன் ,
நசிர், இலக்கிய அணி தலைவர் பத்மநாபன், முகமது யூசுப், எழிலரசன், ஈஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டு கலந்துரையாடினர்.
நிறைவாக ஊடக பிரிவு தலைவர் செந்தில்குமார் நன்றி தெரிவித்தார்.
நிகழ்வின் இறுதியில் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமாரின் மறைவிற்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக இரங்கல் தெரிவிக்கப்பட்டது.