Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கீழப்புதூரில் குடிபோதையில் போலீஸ்காரரிடம் தகராறு செய்த வாலிபர் மீது வழக்குப்பதிவு .

0

 

திருச்சி கீழப்புதூரில்
குடிபோதையில் போலீஸ்காரரிடம் தகராறு செய்த வாலிபர் மீது வழக்குப்பதிவு .

மகாவீர் ஜெயந்தியையொட்டி திருச்சி மாநகரில் போலீசார் திருட்டுத்தனமாக மது விற்கப்படுகிறதா? என ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதே போன்று திருச்சி பாலக்கரை போலீஸ்காரர் அஜ்மல் கான் என்பவர் கீழப்புதூர் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பாலக்கரை பகுதிகளுக்கு உட்பட்ட பகுதியில் டாஸ்மாக் கடை பார்களில் திருட்டுத்தனமாக ஏதேனும் மது விற்கப்படுகிறதா? என கண்காணித்து வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பாலக்கரை கீழப்புதூரை சேர்ந்த பிரசாந்த் என்ற வாலிபர் குடிபோதையில் காவலர் அஜ்மல்கானிடம் தகராறு செய்தார்.

இது குறித்து அஜ்மல்கான் பாலக்கரை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் பிரசாந்த் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.