திருமால் அடியார்கள் குழாம் சார்பில் ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள கொடிமரம் முன்பு 3000 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருந்த அனுமன் சிலையை நகற்றி வைத்துள்ளனர்.
அதனை பழைய நிலைக்கு நகர்த்த கோரியும், மூலவர் ரெங்கநாதர் சிலை பாதத்தை சீரமைக்க வலியுறுத்தியும் ஸ்ரீ ராமானுஜ திருமால் அடியார்கள் குலாம் சார்பில் திடீர் போராட்டம்.
திருமால் அடியார்கள் குழாமை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் ஸ்ரீரங்கம் கோவிலின் உள்ளே திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீரங்கம் கோவிலில் ரங்கா ரங்கா கோபுரம் முன்பு திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், விருதுநகர் , திருச்சி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆண்கள், பெண்கள் என 300க்கும் மேற்பட்டோர் ஜால்ரா வாசித்து ஸ்ரீரங்கம் கோவில் உள்ளே கொடிமரம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உள்ள மூலவர் சிலைக்கு நேர் எதிரே கொடிமரம் அருகே இருந்த ஆஞ்சநேயர் சிலையை நகற்றி வைத்துள்ளனர். அவற்றை பழைய இடத்திற்கு மாற்ற வேண்டும். மூலவர் ரங்கநாதர் பாதம் சீரமைக்க வேண்டும் எனக் கூறி அவற்றை சிதலம் அடைய வைத்துள்ளனர்.
மூலவர் ரங்கநாதர் சிலையின் பாதத்தை பழைய நிலைக்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தற்பொழுது 300க்கும் மேற்பட்ட அடியார் குழாமை சேர்ந்தவர்கள் ஜால்ரா அடித்து ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டு அற போராட்டத்தில் ஈடுபட்டனர்.