Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி நீதிமன்றத்தில் இன்று லோக் அதாலத் .2500 வழக்குகளுக்கு தீர்வு.

0

திருச்சி கோர்ட்டில் லோக் அதாலத் இன்று நடந்தது :

முதன்மை நீதிபதி பாபு, 4 வழக்கில் பயனாளிகளுக்கு 2 கோடியே 7 லட்சம் வழங்கினார்.

திருச்சி கோர்ட்டில் லோக் அதாலத் எனும் உடனடி தீர்வு முகாம் மாவட்ட முதன்மை நீதிபதி கே. பாபு தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும் சார்பு நீதிபதியுமான நசீர் வரவேற்று பேசினார். நீதிபதிகள் ஜெயசிங், தங்கவேல், நந்தினி, ஜெயக்குமாரி ஜெமி ரத்னா, மீனா சந்திரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நீதிபதி ஜெயப்பிரதா நன்றி கூறினார் .

முகாம் காலையில் தொடங்கியவுடன் உடனடி தீர்வு ஏற்பட்டு 4 வழக்குகளில் மட்டுமே, பயனாளிகளுக்கு, ரொக்கம் மற்றும் காசோலைகளை மாவட்ட முதன்மை நீதிபதி கே பாபு, 2 கோடியே 7 லட்சத்து 72 ஆயிரத்து ரூ.787 வழங்கினார்.

இதில் திருச்சி வழக்கறிஞர் சங்கத் தலைவர் எஸ் பாலசுப்பிரமணியன்,
திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி. வெங்கட், திருச்சிறப்பள்ளி வழக்கறிஞர் சங்க தலைவர் பாலசுப்ரமணியன்
செயலாளர் கண்ணன், அரசு வழக்கறிஞர் மோகன், செயற்குழு உறுப்பினர்கள் சுதர்சன், சந்தோஷ் குமார் மற்றும் அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள், பயனாளிகள், வங்கி, காப்பீட்டு அலுவ லர்கள் கலந்து கொண்டனர். இன்று 2500 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.