தஞ்சையில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ள இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்றது .
வருகின்ற 29.02.2024 அன்று தஞ்சையில் அஇஅதிமுக பொதுச்செயலாளர், எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பது தொடர்பான நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்றனர்.