திருச்சி: ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினார் மாவட்ட செயலாளர் குமார் .
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76. வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில்..
பெல் தொழிற்சங்க வாயில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் திருஉருவ சிலைக்கும்.. அதன் அருகே அமைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா அவர்களின் திருஉருவப்படத்திற்கும்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து பொதுமக்களும் காலை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் எஸ் எஸ் ராவணன் , எஸ் கே டி கார்த்திக். சுபத்ரா தேவி . சாருமதி மற்றும்,திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்ட, கிளை கழக நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.