Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.

0

 

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா, முத்தமிழ் அறிஞர் இலக்கிய மன்ற விழா மற்றும் உடற்கல்வி போட்டி பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா 13-02-2024 செவ்வாய்க்கிழமை மாலை 4.00மணிக்கு பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது.

பள்ளியின் தலைமையாசிரியர் எழிலரசி தலைமையில், மக்கள் சக்தி இயக்கம் மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ ஆகியோர் முன்னிலை வைத்தார்கள்.

வந்தவர்களை உதவி தலைமை ஆசிரியர் வினோதினி வரவேற்றார்.

ஆசிரியர் அருணா பள்ளி பற்றிய அறிக்கை வாசித்தார் .

சிறப்பு விருந்தினராக ஒய்வு பெற்ற ஆசிரியர் மா.தமிழரசி கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்.
35 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுரேஷ்,வட்ட செயலாளர் ரெங்கநாதன், மக்கள் சக்தி இயக்க மாவட்ட செயலாளர் ஆர். இளங்கோ ஆகியோர் வாழ்த்துரையுடன், பரிசுகள் வழங்கினார்கள்

விழாவில் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் பள்ளியில் அதிக மதிப்பெண்கள் எடுத்த முதல் முன்று மாணவர்களுக்கும் விருது வழங்கப்பட்டது.

மேலும் வருகை பதிவேட்டிற்கான விருது, பல்துறை விருதுகள்,
உத்வேக விருது போன்ற பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது.

நிகழ்வில் பள்ளி மாணவர்களின் நாட்டியம், நாடகம், கவிதை போன்ற கலை நிகழ்ச்சிகளை ஆசிரியர் விக்டோரியா தொகுத்து வழங்கினார் .

திருச்சி மேற்கு வட்ட வள மைய மேற்பார்வையாளர் சரண்யா, சகுந்தலா, அமுதா, மற்றும் ஆசிரியர்கள் விழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்தார்கள்.

தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் மாணாக்கர்கள் , பொது மக்கள் கலந்து சிறப்பித்தார்கள்

முடிவில் ஆசிரியர் ராணி நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.