ஆசிரியர் தாக்கியதில் திருச்சி காஜாமியான் பள்ளி மாணவனின் மனநிலை பாதிப்பு. உரிய விசாரணை நடத்த மதுரை ஐகோர்ட் உத்தரவு .
திருச்சி காஜாமலை பகுதியைச் சேர்ந்த இக்பால் பால் வியாபாரி. இவரது மகன் காஜாமியான் பள்ளியில் 9ம் வகுப்பு வருகிறார்.
காஜா மியான் பள்ளி அறிவியல் ஆசிரியர் முருகதாஸ் என்பவர் செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததாக மாணவனை கடந்த அக்டோபர் 3ஆம் தேதி அடித்ததில் மாணவனின் மனநிலை பாதித்ததாக அவரது தந்தை மதுரை ஹைகோர்ட்டில் மருத்துவச் சான்றிதழ் உடன் வழக்கு பதிவு செய்தார்.
அதன் பெயரில் இன்று ஆசிரியர் மீது உரிய விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு கேகே நகர் காவல் நிலையத்திற்கும், திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல மையத்திற்கும் மதுரை ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டு உள்ளனர் .
நவம்பர் மாதம் கல்வி அலுவலர் அழைத்து விசாரித்த போது ஆசிரியர் படத்தைப் பார்த்த மாணவன் காக்கா வலிப்பு மயங்கி விழுந்தார். என்னைத் தொடர்ந்து அந்த ஆசிரியரை பணி நீக்கம் செய்வதாக முதன்மை கல்வி அலுவலர் கூறியிருந்தார் என்பதை குறிப்பிடத்தக்கது .