திருச்சி 37, 38 வது வார்டுகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்கக்கோரி தமுமுக , மமக சார்பில் கலெக்டர், மேயரிடம் மனு
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பில் இன்று மனு (12.2.24) அளிக்கப்பட்டது.
காமராஜ் நகர் கிளை, 37வது வார்டு மற்றும் 38 வது வார்டு பகுதிகளில் ரோடு மற்றும் தெருக்களில் அதிகமாக சுற்றி திரிந்து
நோயினை விளைவிக்கும் பிராணிகளை உடனடியாக பிடிக்கும் மாறும், அப்பகுதி மக்களுக்கு தரமான சாலை மற்றும் தெரு விளக்குகள் அமைத்து தர வேண்டியும் மாவட்ட கலெக்டரிடம் மாநகராட்சி மேயரிடமும் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்டம் தலைவர் முகமது ராஜா தலைமையிலும்,
மாவட்ட நிர்வாகிகள் அஷ்ரப் அலி ,மாவட்ட செயலாளர் மமக,
முகமது இலியாஸ் மாவட்ட செயலாளர்,
தமுமுக காஜா மொய்தீன், மாவட்ட பொருளாளர்.
மாவட்டத் துணை தலைவர் மு.சையது முஸ்தபா
ரஹ்மத்துல்லா துணை செயலாளர், சுற்றுச்சூழல் அணி செயலாளர் முகமது ரபீக் ,முகமது அலி ஜின்னா மற்றும் காமராஜ் நகர் கிளை நிர்வாகிகள் முன்னிலையிலும் மனு அளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.