திருச்சியில் திருட்டுத்தனமாக குடிநீர் குறிஞ்சிய நபரின் மின் மோட்டார் பறிமுதல்
திருச்சி உறையூர் செவந்தி பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் மாநகராட்சி குடிநீர் விநியோகம் சரியாக வருவதில்லை என்று குடியிருப்போர் மாநகராட்சி அதிகாரிகளிடம் அளித்த புகாரின் அடிப்படையில் , இன்று அதிகாலை இளநிலை பொறியாளர் ரமேஷ் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டதில் ஒரு வீட்டில் குடிநீர் குழாயுடன் மின்மோட்டர் இணைத்து குடிநீரை திருட்டுத்தனமாக எடுத்தது தெரியவந்தது,
உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் வீட்டிலிருந்து மின் மோட்டாரை பறிமுதல் செய்து மேலும் அவர்களுக்கு இதுபோன்று செயலில் ஈடுபடக்கூடாது என்று அறிவுரை வழங்கினர்.
திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் மாநகராட்சி உதவி ஆணையர் வெங்கட்ராமன் ஆகியோர் கூறுகையில் இதுபோன்று பல இல்லங்களில் குடிநீர் மின்மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பது மிகப்பெரிய குற்ற செயலாகும் இதனால் மற்றவர்களுக்கு சரிவர குடிநீர் கிடைக்க முடியாத சூழல் ஏற்படும், ஆகையால் இது போன்ற குற்ற சம்பவத்தில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் இது போன்ற செயலில் ஈடுபட்டால் வீட்டின் உரிமையாளருக்கு அபராத தொகையும் மின் மோட்டாரையும் பறிமுதல் செய்யவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.