Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாமன்ற உறுப்பினர் அரவிந்தன் மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளராக நியமனம். அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

0

 

திருச்சி 14 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சி.அரவிந்தன் அவர்களை அதிமுக மாநில புரட்சித்தலைவி அம்மா பேரவை துணை செயலாளராக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார் .

அரவிந்தன் ஏற்கனவே திருச்சி டிடி ஏரியா சினிமா வினியோஸ்தர்கள் சங்க துணைத் தலைவராகவும், 14வது வார்டு கவுன்சிலர் ஆகவும் சிறந்த முறையில் பணியாற்றி வருகிறார் .

14 வது கவுன்சிலராக அவரது சிறந்த பணியை யாரும் சொல்ல தேவையில்லை அந்த அளவுக்கு மக்கள் பணியில் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறார் என்பது திருச்சி மாநகரத்தில் உள்ள அனைவரும் அறிந்ததே .

 

தனது வார்டு மக்களுக்கு ( சாலை வசதி, குடிநீர் வசதி போன்றவற்றை ) அதிமுக கவுன்சிலர் என்பதால் மாநகராட்சி அதிகாரிகளால் செய்ய முடியாது என்பதை தனது சொந்த பணத்தை செலவு செய்து செய்து மக்களின் மனதை கவர்ந்தவர் .

இது இல்லாமல் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அன்னதான நிகழ்ச்சிகளையும் சிறப்பாக நடத்தி வருபவர் .

இவரது மக்கள் பணியினை பாராட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு இந்த மாநில அளவிலான பதவியை கண்டு அழகு பார்த்து உள்ளார் .

புதிய பதவி ஏற்ற அரவிந்தனுக்கு வடக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி  இணை செயலாளரும் புங்கனூர் ஒன்றிய கவுன்சிலருமான கார்த்தி , துணை செயலாளர் வழக்கறிஞர் தேவா  அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் .

இந்த கட்சிப் பணியிலும் சிறப்பாக பணியாற்றி மேலும் பல உயர் பதவிகளை பெற திருச்சி எக்ஸ்பிரஸ் சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் .

Leave A Reply

Your email address will not be published.