Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகரில் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் திருநங்கைகளை கண்காணிக்க ஸ்பெஷல் டீம் அமைப்பு.

0

 

திருச்சி மாநகரில் ஜங்ஷன் ரயில் நிலையம், சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட், மன்னார்புரம் உட்பட முக்கிய சந்திப்பு பகுதிகளில், இரவு நேரத்தில், கூட்டமாக திருநங்கையர் சுற்றித் திரிகின்றனர்.

இதனால், மாநகர போலீசாருக்கு பல புகார்கள் வந்தன.இதை தொடர்ந்து இரவு நேரங்களில் சுற்றித் திரியும் திருநங்கையரை கண்காணிக்க, ‘ஸ்பெஷல் டீம்’ அமைக்கப்பட்டுள்ளது.

மூன்று பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், 18 பேர் கொண்ட மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு, இரவு நேர ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களாக இந்த பிரிவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.