Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் வெஸ்ட்ரியன்ஸ் ரோலிங் டிராபிக்கான 15 வது மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி. நாளை சூப்பர் லீக் போட்டிகள் நடைபெறுகிறது

0

 

திருச்சியில் இன்று வெஸ்ட்ரியன்ஸ் ரோலிங் டிராபிக்கான 15வது மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி லீக் போட்டிகள் நடைபெற்றது.

இந்த சாம்பியன்ஷிப் போட்டியினை முதுநிலை மண்டல மேலாளர் வேல்முருகன், டாக்டர் வி.ராஜா மான்சிங், செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி பள்ளி தாளாளர் விக்னேஸ்வரன் , ஜெயந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர் .

தலைமை ஆசிரியர் சைமன் குமார் வரவேற்புரை ஆற்றினார் .

 

நாளை நடைபெரும் சூப்பர் லீக் போட்டிகளுக்கு பின்வரும் பள்ளிகள் தகுதி பெற்றுள்ளன.

ஆண்கள் பிரிவில் 1.சாண்டா மரியா மேல்நிலைப் பள்ளி,
2.கே.கே.நகர், அரசு உயர்நிலைப் பள்ளி

3) ராஜாஜி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி 4) எஸ் பி ஐ ஓ ஏ சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளி

பெண்கள் பிரிவில்

1) எஸ் பி ஐ ஓ ஏ சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளி

2) காவேரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி

3)ராஜாஜி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி 4) சாந்தா மரியா மேல்நிலைப் பள்ளி.

ஸ்ரீ பி.வேல்முருகன் – மண்டல முதுநிலை மேலாளர் – SDAT ரெவ். DR. வி.ராஜாமன்சிங், செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி சிபிஎஸ்இ பள்ளியின் தாளாளர், ஸ்ரீ.பி.விக்னேஷ்வரன், எஸ்.கே. ஜெயந்தி துணைத் தலைவர்கள் திருச்சி மாவட்ட கைப்பந்து சங்கம், வெஸ்ட்ரியன்ஸ் ரோலிங் டிராபிக்கான 15வது மாவட்ட கைப்பந்து சாம்பியன்ஷிப்பை துவக்கி வைத்தார்கள் தலைமையாசிரியர் ஏ.சைமன் சுகுமார் வரவேற்றார்.

முடிவில் திருச்சி மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் ஆர்.கருணாகரன் நன்றி கூறினார் .

Leave A Reply

Your email address will not be published.