வீரவணக்க நாள் நிகழ்ச்சிகளில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் அனைவரும் கலந்து கொள்ள மாவட்ட செயலாளர் குமார் வேண்டுகோள் .
திருச்சி புறநகர் தெற்க அஇஅதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
திருச்சியில் மாணவரணி சார்பில் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து மொழிப் போராட்டத்தில் அன்னை தமிழுக்காக இன் உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வாக 25.01.2024 வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில்..கோர்ட் எம்ஜிஆர் சிலை அருகில் இருந்து.. ஊர்வலமாக சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.
அதனை தொடர்ந்து..
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
மாலை 6.00 மணியளவில்
பொன்மலை மேல கல்கண்டார் கோட்டை திருவிக திடல், பஞ்சாயத்து போர்டு அருகில், நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் , கடக அமைப்பு செயலாளருமான கரூர் M.சின்னசாமி
புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார்
தலைமை கழக பேச்சாளர்.
புதுகை செல்லம் ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர் .
மேற்கண்ட இரு நிகழ்ச்சிகளிலும்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட மாவட்ட , ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, கிளை, வட்ட, வார்டு, சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம்.
என திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .