Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

25ஆம் தேதி நடைபெற உள்ள வீரவணக்க நாள் நிகழ்வுகளில் அனைவரும் திரளாக பங்கேற்க வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி அழைப்பு.

0

 

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி. அறிக்கை:-

அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க,

25.1.2024 ம் தேதி வியாழக்கிழமை
காலை 10.00மணிக்கு திருச்சி மாவட்ட அஇஅதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக கோர்ட் எம்ஜிஆர் சிலையிலிருந்து தென்னூர் மொழிப்போர் தியாகிகளின் நினைவிடம் வரை அமைதி ஊர்வலமாக சென்று நினைவிடத்தில் மலர் வலையம் வைத்து வீரவணக்கம் செலுத்தப்படும்.

அன்று மாலை 6.00மணிக்கு
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக மாணவரணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி, மணப்பாறை வடக்கு ஒன்றியம், மரவனூரில் நடைபெறும்.

வரகூர் அ.அருணாச்சலம்
கழக அமைப்பு செயலாளர்,
முன்னாள் அமைச்சர்
அரங்க சத்தியமூர்த்தி, மு.பரஞ்ஜோதி
மாவட்ட கழக செயலாளர்
முன்னாள் அமைச்சர்,
T.அறிவழகன்
மாவட்ட மாணவரணி செயலாளர்

ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

என மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .

Leave A Reply

Your email address will not be published.