Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சாமானிய மக்கள் நலக் கட்சியினர் பொன்மலை மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் .

0

 

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் (42, 45,46 வார்டுகளில்) நடக்கின்ற வார சந்தைகளை ஏலம் விடாமல் மாநகராட்சிக்கு இழப்பை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சி ஆணையரிடம் பலமுறை புகார் கொடுத்தும். சந்தைகள் வழக்கமாக நடைக்கிறது.

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் எந்த சந்தை நடந்தாலும் ஏலம் விடப்பட்டு தான் நடக்கிறது ஆனால் பொன்மலை மண்டலத்திற்கு உட்பட்ட நேரு தெரு, சன்னாசி தெரு பகுதியில் வார சந்தை எப்பொழுதும் போல் இயங்குகிறது .. இது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காத மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள பொன்மலை கோட்ட அலுவலகத்தை சாமானிய மக்கள் நல கட்சியினர் மற்றும் தோழமை கட்சிகளுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு சாமானிய மக்கள் நலக் கட்சி விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜோசப் தலைமை தாங்கினார். தமிழ்ப்புலிகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் ரமணா முன்னிலை வகித்தார். ரெட் பிளாக் கட்சி ராமலிங்கம், சாமானிய மக்கள் நலக் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சைனி மாவட்ட துணை செயலாளர் தனபால், சாமானிய மக்கள் நலக் கட்சி உறுப்பினர்கள் கோகிலா மற்றும் பொண்ணம்மாள், மாலதி பாண்டிசெல்வி அமுதா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர் அதனை தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.