65 வது வார்டில் ரூ.6.60 கோடியில் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை கவுன்சிலர் அம்பிகாபதி தொடங்கி வைத்தார் .
திருச்சி மாநகராட்சி 65-வது வார்டில்
ரூ.6. 60 கோடியில் வயர்லெஸ் ரோடு புதிய சாலை அமைக்கும் பணி
பூமி பூஜையை கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி இன்று தொடங்கி வைத்தார்
திருச்சி மாநகராட்சி 65-வது வார்டுக்கு உட்பட்ட வயர்லெஸ் ரோடு சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து அப்பகுதி அதிமுக கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்று 6.60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடந்தது .பூமி பூஜையை 65-வது வார்டு கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி இன்று தொடங்கி வைத்தார். இதில் அதிகாரிகள். பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மக்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த கவுன்சிலர் அம்பிகாபதிக்கும், மாநகராட்சிக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.