திருச்சியில் பூட்டிய வீட்டில் கொத்தனார் பிணம்.
திருச்சி தென்னூர் இதயாத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் ஐயப்பன் (வயது 36) இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார்.
இவர் தென்னூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தனியாக வசித்து வந்தார். ஐயப்பனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஐயப்பன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக தில்லைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டுக்குள் சென்று பார்த்த பொழுது அங்கு ஐயப்பன் இறந்து அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.
பிறகு போலீசார் அங்கிருந்து ஐயப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.