Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பொன்மனை ரயில் நிலையம் வழியாக பஸ்கள் செல்ல வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் மனு.

0

 

பொன்மலை வரும் அனைத்து பஸ்களும் பொன்மலை ரயில் நிலையம் வழியாக செல்ல வேண்டும் என வழியுறுத்தி மக்கள் சக்தி இயக்கம் சார்பில் மனு ,

திருச்சியிருந்து பொன்மலை வரும் பஸ், பொன்மலையிருந்து திருச்சி வரும் பஸ்கள் இரண்டு மாதம் முன்பு வரை பொன்மலை ரயில் நிலையம் சென்று வந்துக் கொண்டு இருந்து, தற்பொமுது பொன்மலை ரயில் நிலையம் வராமல் நேராக செல்கிறது. இதனால் ரயில் பயணிக்கும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் உட்பட அனைத்து பயணிகளும் பெறும் இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.

இதனை கருத்துக் கொண்டு மாவட்ட மாவட்ட ஆட்சியாளிடம் பொதுமக்கள் மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பொன்மலை வரும் அனைத்து பஸ்களும் பொன்மலை ரயில் நிலையம் வழியாக வந்து செல்ல வேண்டி மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம் தலைமையில் மனு வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.