திருவானைக்காவலில் மூதாட்டி தீயில் கருகி சாவு

சாமி கும்பிட விளக்கு பற்ற வைத்த போது விபரீதம்.
திருச்சி திருவானைக்காவல் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் காமாட்சி (வயது 75) சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் சாமி அறையில் உள்ள விளக்கை ஏற்றினார். அப்பொழுது சேலையில் தீ பற்றி எரிந்து காமாட்சி உடல் முழுவதும் தீ பரவியது இந்த சம்பவத்தில் காயமடைந்த காமாட்சி ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.