Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பாராட்டுவதற்கும் ஒர் மனசு வேண்டும். திருச்சி என்.ஆர். ஐ ஏ எஸ் அகாடமியில் நடைபெற்ற வரலாறு முக்கியம் நிகழ்ச்சியில் கவிஞர் நந்தலாலா .

0

'- Advertisement -

 

திருச்சி என்.ஆர்.ஐ.ஏ எஸ். அகாடமி மற்றும் திருச்சிராப்பள்ளி ஃபீனிக்ஸ் ரோட்டரி சங்கம், ஜம்புகேஸ்வரம் ரோட்டரி கிளப் இணைந்து நடத்திய வரலாறு முக்கியம் என்ற தலைப்பிலான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி என். ஆர்.ஐ.ஏ.எஸ். அகாடமி வளாகத்தில் நடந்தது.

N

Suresh

நிகழ்ச்சிக்கு பீனிக்ஸ் ரோட்டரி சங்கத்தின் தலைவரும் என்.ஆர்.ஐ. ஏ.எஸ்.அகாடமி இயக்குனருமான ஆர். விஜயாலயன் தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கவிஞர் நந்தலாலா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
இங்கு
பல பேருக்கு பாராட்ட தெரியாது. பல பேரால் பாராட்ட முடியாது. நான் இந்த அரங்கத்துக்கு கவிஞர் வைரமுத்து வந்தபோது வந்திருந்தேன். அப்போது விஜயாலயன் ஆற்றிய அறிமுக உரையின் நேர்த்தியை கேட்டு வைரமுத்து கண் கலங்கினார். பாராட்டுவதற்கும் ஒரு மனசு வேண்டும். பாராட்டுச் சொற்கள் போல சொர்க்கம் இல்லை. படிப்பை விட நல்ல குணம் முக்கியம்.
திருச்சியில் இருக்கும் மலைக்கோட்டையின் வயது 3400 மில்லியன் ஆண்டுகள்.
தமிழ் மொழிக்கு மூத்தது. காவிரியை விட பழமையானது. காவிரி முதன்முதலாக சலசலத்து வந்த போது பார்த்த ஒரே ஜீவன் மலைக்கோட்டை மட்டுமே. ஆனால் அது அமைதியாக இருக்கிறது.
இந்த மலைக்கோட்டையின் உச்சியில் நாயக்கர் மன்னனின் அமைச்சர் கட்டிய 550 ஆண்டுகள் பாரம்பரியமிக்க உச்சி பிள்ளையார் கோவில் இன்னமும் இருக்கிறது.
ஆனால் கோட்டை, அகழி காணாமல் போய்விட்டது. கரிகால் சோழன் கட்டிய 2200 ஆண்டுகள் பழமையான கல்லணை இருக்கிறது. ஆனால் அந்த அதே ஆட்சி காலத்தில் தலைநகராக விளங்கிய திருச்சி உறையூரில் அரண்மனையின் சுவடு இல்லை. இதிலிருந்து வரலாறு நமக்கு தெரிவிப்பது என்ன வென்றால், அதிகார அடையாளங்கள் அழிந்து போகும். ஆனால் மக்களின் பயன்பாடு மட்டும் வாழ்வில் நிலைத்திருக்கும். காலத்தை போன்ற சல்லடை எதுவும் கிடையாது. காலத்தைப் போன்ற ஞானவான் கிடையாது.

வரலாறு ஆண்டுகளின் வரிசை மட்டுமல்ல. மாறிய வாழ்க்கையின் தடங்கள்.
கண்டுபிடிப்புகளில் ஆகச் சிறந்தது புத்தகம்.
அது உலகில் அறிவை பரவலாக்கியது. அறிவே ஒரு நாட்டின் செல்வ செழிப்புக்கு அடிப்படை. அந்த அறிவை தருபவர் கடவுளுக்கு ஒப்பானவர்.
இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக
ரொட்டேரியன் லியோ ஃபெலிக்ஸ் கலந்து கொண்டு பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் திரளான ரோட்டரி நிர்வாகிகள், போட்டி தேர்வு பயிற்சி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.