திருச்சியில் போலீஸ் பிடியிலிருந்து தப்பிய கைதி சிக்கினாள்.
திருச்சி கம்பரசம்பேட்டையில் விசாலாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கடந்த 2-ம் தேதி கொள்ளையர்கள் புகுந்து பின் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ. 7000 பணத்தை திருடி சென்றனர். இது தொடர்பாக ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை பிடித்தனர். இதில் சிறுவர்களை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
பின்னர் பிடிபட்ட பாலக்கரை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 20), எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (24) ஆகிய 2 பேரையும் நேற்று முன்தினம் இரவு நீதிபதி முன்பு ஆஜர் படுத்துவதற்காக போலீஸ் ஜிப்பில் அழைத்து வந்தனர்.
காஜாமலை காலனியில் உள்ள நீதிபதியின் வீட்டு முன்பு ஜிப்பை நிறுத்தி இருவரையும் வாகனத்தில் இருந்து இறக்கி நீதிபதி வீட்டுக்கு அழைத்து சென்றனர். போது மகேந்திரன் இயற்கை உபாதைக்கு செல்வதாக கூறி போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓடினார். இருட்டாக இருந்த காரணத்தால் அவனைப் பிடிக்க இயலவில்லை. பின்னர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இரவு முழுவதும் தேடுதல் வேட்டை நடந்தது. இருப்பினும் போலீஸ் கண்ணில் மகேந்திரன் சிக்கவில்லை.
இதனை தொடர்ந்து ‘ திருச்சி மாநகர போலீஸ் அவர்களுடன் மாவட்ட போலீசார் இணைந்து அவனைத் தேடி வந்த நிலையில் போலீசாரிடம் சிக்கினான்
இதை அடுத்து அவன் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.