Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

3 மாநில சட்டசபை தேர்தலில் அபார வெற்றி . திருச்சியில் பாஜக . மாவட்டத் தலைவர் ராஜசேகரன் தலைமையில் வெற்றி கொண்டாட்டம் .

0

 

முன்று மாநிலங்களில் பாஜக வென்றதை திருச்சி பாஜகவினா் நேற்று மாலை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

இதையொட்டி திருச்சி பாஜகவினா் ஜங்ஷன் ரயில் நிலையம் அருகிலுள்ள வழிவிடு 6 வேல்முருகன் கோயிலில் இருந்து அனுமதியின்றி வாகனப் பேரணி செல்ல முயன்றனா். இதனால் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் பாஜகவினரை தடுத்து நிறுத்த முயன்றனா். இதனால் இருதரப்புக்கும் இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சமாதானப் பேச்சுக்குப் பிறகு பாஜகவினா் முருகன் கோயிலில் இருந்து ஊா்வலமாக மத்தியப் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றனா்.

பின் அங்கிருந்த பொதுமக்களிடம் இனிப்புகளை வழங்கினா்.

இந்த நிகழ்விற்க்கு மாவட்டத் தலைவா் எஸ். ராஜசேகரன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச்செயலா்கள் காளீஸ்வரன், தண்டபாணி, ஒண்டிமுத்து, நிா்வாகி சிவசுப்ரமணியம், பெரம்பலூா் பாா்வையாளா் இல. கண்ணன் உள்ளிட்ட திரளான பாஜகவினா் இந்த வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனா்.

Leave A Reply

Your email address will not be published.