திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திற்கு சென்ற பட்டதாரி பெண் மற்றும் வாலிபர்
திடீர் மாயம்.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் கிராப்பட்டி எமிலி நகரை சேர்ந்தவர் கிறிஸ்டியன் தாஸ். இவரது மகள் ஆந்த்ரேயா தாஸ் (வயது 30) பி.பி.ஏ படித்து முடித்துள்ளார். சம்பவத்தன்று சத்திரம் பஸ் நிலையத்திற்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை .இது குறித்து அவரது தந்தை கிறிஸ்டியன் தாஸ் எடமலைப்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் வழக்கு பதிந்து விசாரண நடத்தி வருகிறார்.
இதேபோல் மணப்பாறை மேட்டுப்பட்டி சேர்ந்த தேவேந்திரன் என்ற 23 வயது வாலிபர் திருச்சி தில்லை நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை .இது குறித்து தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.