Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் திருநங்கையை கொலை செய்த வாலிபர்களுக்கு போலீசார் வலை.

0

'- Advertisement -

 

Suresh

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் மேல காவக்காரத் தெருவைச் சோந்தவா் திருநங்கை மணிகண்டன் என்கிற மணிமேகலை (வயது 28). இவா் நேற்று இரவு பிச்சாண்டாா் கோயில் ஊராட்சி வாழவந்தபுரம் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கரையோரத்தில் நின்றிருந்தாா். அப்போது அங்கு வந்த இளைஞா்கள் சிலா் மணிமேகலையிடம் தகராறு செய்துள்ளனா். இதில், இளைஞா்கள் சோந்து மணிமேகலையை கழுத்தை அறுத்து கொலைசெய்து விட்டு தப்பிஓடினா்.

இதுகுறித்து திருநங்கை சுகன்யா என்பவா் கொள்ளிடம் போலீஸாருக்கு தகவல் அளித்தாா்.

அதன்பேரில், சம்பவ இடத்துக்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ. வருண்குமாா், லால்குடி காவல் துணை கண்காணிப்பாளா் அஜய்தங்கம் உள்ளிட்ட போலீஸாா் சென்று மணிமேகலை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.