Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பழ மரக்கன்றுகள் வழங்கிய தலைமை ஆசிரியை.

0

பழமரங்கள் வளர்ப்போம் உயிரிவளம் காப்போம்

தா.பேட்டையை அடுத்த காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று மாணவர்களுக்குபழ மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

சுற்றுச்சூழல் மாசுபாட்டால் பறவை இனங்கள் அழிந்து வருகின்ற இந்த சூழலில் பறவையினங்களை காக்கும் பொருட்டும் உயிரி வளத்தை மேம்படுத்தும் பொருட்டும் பள்ளியின் தலைமை ஆசிரியர் தி. கீதா ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மா ,பலா, கொய்யா, சப்போட்டா, எலுமிச்சை போன்ற பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டனார்.

போதிய மழை இல்லாத சூழலில் மாணவர்களின் மத்தியில் மரங்கள் வளர்க்கும் பழக்கத்தை அதிகப்படுத்துவதற்காக பள்ளியின் தலைமை ஆசிரியரால் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களும் ஊர்ப் பொது மக்களும் வெகுவாகப் பாராட்டினர்.

இந்த இனிய நிகழ்ச்சியை பள்ளியின் ஆசிரியப் பெருமக்கள் ஒருங்கிணைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.