திருச்சி அதவத்தூரில்
பயணிகள் நிழற்குடை
திருநாவுக்கரசர் எம்.பி திறந்து வைத்தார்.
திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி மணிகண்டம் ஒன்றியம் அதவத்தூர் ஊராட்சி பகுதியில் சுமார் ரூ.6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் மாமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் பி. கோவிந்தராஜன், மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல்.ரெக்ஸ்,மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் என்ஜினீயர் பேட்ரிக் ராஜ்குமார், மணிகண்டம் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் கள்ளிக்குடி சுந்தரம், மாநில செயலாளர் கே. ஆர். ராஜலிங்கம், வடக்கு வட்டார தலைவர் கருணாகரன், மணிகண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அதவத்தூர் ஊராட்சி தலைவர் கொடியரசு மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் எழிலரசன், அர்ஜுன், ராமசாமி, யுவன், கதிர்வேல், பொன்னன், ஆரியன். வட்டார நிர்வாகிகள் சேட்டு, தனசேகரன், சிங்காரவேல்் வழக்கறிஞர் விக்னேஷ், மணப்பாறை வட்டார தலைவர் சிவசண்முகம் சன் கன்செக்சன் சமயபுரம் நசீர் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.