Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி பொன்மாலைப் பகுதி சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

0

 

.கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர்
மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி மாவட்ட செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழி காட்டுதலின் படி திருச்சி கிழக்கு மாநகரம் பொன்மலை பகுதியில் 46,46a,வட்டக் கழகங்களின் சார்பாக தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பொன்மலை பகுதி கழகச் செயலாளர் E.M.தர்மராஜ் வரவேற்புரையாற்றினார்
வட்டக் கழகச் செயலாளர்கள்
பரமசிவம், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருச்சி மாநகர செயலாளரும் மண்டல குழு தலைவருமான மு.மதிவாணன் மற்றும்
தலைமைக் கழக பேச்சாளர் எழும்பூர் கோபி சிறப்புரை ஆற்றினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட கழக துணைச் செயலாளர் செங்குட்டுவன் மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள் தலைமைக் கழக பேச்சாளர்கள் ஏர்போர்ட் பொன்னுசாமி, கோவிந்தன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

இறுதியாக கூட்டத்தில்
46 வது மாமன்ற உறுப்பினர் ரமேஷ்
கூட்டத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் செய்த சாதனைகளை ஒவ்வொன்றையும் பட்டியலிட்டு உரையாற்றி நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.