திருச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கு நிலவேம்பு கசாயம்.மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் தலைமை குற்றவியல் நீதிபதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
திருச்சி நீதிமன்றத்தில்
வழக்கறிஞர் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி
மாவட்ட முதன்மை நீதிபதி பாபு, தலைமை குற்றவியல் நீதிபதி மீனா சந்திரா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
திருச்சி நீதிமன்றம் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது .
இதில்
மாவட்ட நீதிபதி பாபு , தலைமை குற்றவியல் நீதிபதி மீனா சந்திரா ஆகியோர் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணியினை தொடங்கிவைத்தனர். குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் முல்லைசுரேஷ், சசிகுமார், விஜய நாகராஜன், கிஷோர் குமார் மற்றும் பல வழக்கறிஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் சிறப்பாக செய்திருந்தார் .